பஷீர் அலி
நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படத்தினைக் கண்டித்து ஹெம்மாதகம பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் கண்டணப் பேரணியும் பொதுக்கூட்டமும் இடம் பெற்றது.
ஹெம்மாதகம டவ்ன் பள்ளியிலிருந்து புறப்பட்ட இப்பேரணியில் 5000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இறுதியாக பேரணி முடிவுற்ற ஹெம்மாதகம-கம்பளை சந்தியில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



