Mar 8, 2013

தர்பியா பயிற்சி வகுப்பு

தர்பியா பயிற்சி வகுப்பு





கடந்த 2013.03.02 'இஷh' தொழுகை முதல் மருநாள் 'சுபஹ்' தொழுகை வரை பறகஹதெனிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரின் மார்க்க அறிவை விரிவுபடுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி தர்பியா பயிற்சி வகுப்புபொன்று 'வெலிகேபொல' தக்கியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் முதல் அம்சமாக சிறப்பு பயான் நிகழ்ச்சி மௌலவி ரிஸ்கான் (மதனி) அவர்களால் நடாத்தப்பட்டது. இதில் காலத்தின் தேவை கருதி 'இலங்கை முஸ்லீம்களின் வரலாறும்; எதிர் நோக்கும் பிரச்சினைகளும்' சம்பந்தமாக மிகதெளிவாக நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் இருந்தும் உன்னத ஸஹாபாக்களின் தியாக வரலாறுகளையும் எடுத்து கூறியமை சொற்பொழிவுக்கு உரம் சேர்த்தது. அத்தோடு மாணவர்கள்;இ பிரதேசவாழ் ஆண் பெண் இருசாராரும் கலந்து சிறப்பித்தமை குரிப்பிடதக்கதாகும்.
அதனை தொடர்ந்து நபிவழியில் எவ்வாறு 'வுழு'  'தயமும்' செய்தல் தொடாhபாகவும் 'தொழுதல்' சம்பந்தமாகவும் விளக்கங்கள் உலமாக்கள் மூலமும் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமும் வழங்கப்பட்டதோடு பயிற்றுவிப்புகளும் நடாத்தப்பட்டமையும் குறிப்பிட்த்தக்கது.

மேலும் 'தஹஜ்ஜத்' தொழுகைளின் பின் குர்ஆன் 'திலாவத்' மற்றும் 'சுபஹ்' தொழுகையின் பின் 'சந்தர்ப்ப துஆக்கள்' தெடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டதோடு அதனை மனனம் இடுவதற்கான ஆர்வமும் ஊட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக மௌலவி ரிஸ்கான் (மதனி) அவர்களால் எமது அமைப்பின் பணி மற்றும் எதிர்கால இலக்குகல் சம்சந்தமாக விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு 'தர்பியா' நிகழ்ச்சிபற்றி கலந்துகொண்ட மாணவர்களிடம் கருத்துக்கள் வினவப்பட்டபோது எதிர்வரும்காலங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகளை நடாத்துமாறு மிகவும் ஆர்வமாக வேண்டிக்கொன்டதோடு இந்நிகழ்ச்சிகல் இனிதே நிறைவுற்றது.
'எமது பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக ஆமீன்....!'

இந்நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டுநடாத்த உதவியவர்கள்

மௌலவி ரிஸ்கான் (மதனி)
மௌலவி சலீம் மலிக் (ஸலபி)
மௌலவி இஜாஸ் (ஷரபி)
தொண்டர் ஆசிரியர் உஸ்மான்
தொண்டர் ஆசிரியர் சியாஉர்ரஹ்மான்
மற்றும் பறகஹதெனிய தஃவா அமைப்பின் பிரதான அங்கதவர்களும் பிரதேசவாழ் மக்களும்.

'எமது பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக ஆமீன்....!'


We Care Always Dawah Activities




இப்படிக்கு
செயளாலர்