Oct 9, 2013

பறகஹதெனிய தஃவா அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா

எமது அமைப்பு கடந்த ரமழான் மாதத்தில் தஃவா நிவ்ஸ் டிவுட்டர் குருஞ் செய்திச் சேவை ஊடாக நடாத்திய கேள்வி நேரம் நிகழ்சிக்கும், PDS மீடியா ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க் இஜாஸ் ஷரபி அவர்களின் கண்கானிப்பில் இடம் பெற்ற இரு தவ்ரா நிகழ்வுகளுக்குமான மாபெரும் பரிசளிப்பு விழா கடந்த 27-09-2013 வெள்ளி மாலை 4:30 மணியளவில் பறகஹதெனிய, சிங்கபுர அல்-மத்ரஸதுல் ஹுஸைனிய்யாவில் மிகச் சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக தொழில் தினைக்கள அதிகாரி சகோதரர் இர்ஷாத் அவர்களும் தொழில் அதிபர் சகோதரர்  அல்ஹாஜ் சிஜாத் அவர்களும் கலந்து கொண்டனர்.  மற்றும் PDS தஃவா பிரிவு ஒருங்கினைப்பாளர் சகோதரர் அப்துல் கரீம் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார். PDS உப செயளாலர் சியாஉர் ரஹ்மான் நிகழ்சிகளை தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.

PDS - Media Unite








No comments: