Jan 11, 2014

மீலாது விழாக்களை கொண்டாட ........

ஷீஆக்களினால் உறுவாக்கப்பட்ட மீலாது விழாக்களை கொண்டாட மக்களை ஆர்வம் ஊட்டும் அன்பர்களே நீங்களும் ஒரு கணம் சிந்தியுங்கள்....

நபியவர்களை உண்மையில் நாம் நேசிக்கின்றோம் என்றால் அவர்கள் கொண்டு வந்த மார்கத்தை அச்சொட்டாக பின்பற்ற வேண்டும். அப்போது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நேசம் எமக்கு கிடைக்கும். அல்லாஹ் கூறுகின்றான் (நபியே!) நீர் கூறும், 'நீங்கள் அல்ல்லாஹ்வை நேசிப்பீர்களானால்,
என்னைப் பின்பற்றுங்கள், அல்ல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்ல்லாஹ் மன்னிப் பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். சூரது ஆல இம்ரான்: வசனம் 31

எனவே மிலாது விழா என்கின்ற பித்அத்துக்களை விட்டு விட்டு நபியவர்களை உண்மையான முறையில் நேசித்து அவர்களை பின்பற்றி அவர்களின் பெயர் குறிப்பிடப்படும் நேரம் எல்லாம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்லக் கூடிய மக்களாக மாறுவோம். அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத்......

No comments: