Aug 8, 2012

சிரிய அகதிகளுக்கு சவுதி அரேபிய அரசு உதவிக்கரம்



சிரியாவில் இருந்து அகதிகளாக ஜோர்த்தானின் எல்லைப் பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ள கிட்டத்தட்ட 800 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக சவுதி அரசு மன்னர் அப்துல்லாஹ்வின் பனிப்புரையில் 43 கொள்கலன்கள் அடங்கிய உலருணவுப் பொருற்களை நேற்று மாலை அனுப்பி வைத்துள்ளது. சவுதி அரேபிய உள்துரை அமைச்சர் அஹமத் இப்னு அப்துல் அஸீஸின் நேரடிக் கண்கானிப்பில் இடம் பெரும் இந்நிகழ்சித் திட்டத்தை ஜோர்தானுக்குகான சவுதி தூதுவர் பஹத் அஸ்ஸய்த் அமுல்படுத்தி வருகின்றார். அதே வேலை இதுவரை செவ்வாய் கிழமை 12:45 மணி வரை சிரிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சவுதி மக்களின் உதவித் தொகை 524 மில்லியன் சவுதி ரியால்களைத் (வங்கிக் கணக்கில்) தாண்டி உள்ளதாக சவுதி உள்துரை அமைச்சர் அஹமத் நேற்று வெளியான ரியாத் பத்திரியில் செய்தி வெளியிட்டர். 

உள்துரை அமைச்சர் அஹமத் 


சவுதி தூதுவர் பஹத் அஸ்ஸய்த் அகதி முகாம்களில் உள்ள மக்களின் நலன் விசாரிக்கும்  போது....

ரியாத் பத்திரிகைக்கு பேட்டி வழங்கும் சவுதி தூதுவர்


சவுதி அரேபிய தூதுக்குழு


உளருணவுப் பொருற்கள் அடங்கிய கொள்கலன்கள்


எம். றிஸ்கான் முஸ்தீன்

No comments: