பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS) வழிகாட்டலில் அஷ்ஷெய்க் இஜாஸ் ஷரபி அவர்களால் பறகஹதெனிய பிரதேசத்தில் நடாத்தப்படும் அல்குர்ஆன் மத்ரஸாவின் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொனரும் முகமாக போட்டி நிகழ்ச்சி ஒன்று அண்மையில் இடம் பெற்றது. அஷ்ஷெய்க் இஜாஸ் ஷரபியின் தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் மாணவர்கள் நிகழ்ச்சிகளை செய்வதனையும் விஷேட அதிதியாக கலந்து கொண்ட PDS இன் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் ஸலபி அவர்கள் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்துவதனையும் படங்களில் காணலாம்.







No comments:
Post a Comment