
PDS அமைப்பின் மீடியா பிரிவில் தன்னால் இயன்றவரை ஊழியனாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தீனை மேலோங்கச்
செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பறகஹதெனியாவைச் சேர்ந்த ஸுஹைல் அஹமத் வேலைவாய்ப்பின் நிமித்தம் கட்டார் நாட்டை நோக்கி அன்மையில்
பயணமானார். இவரை அவரது இல்லத்தில் சந்தித்த PDS அமைப்பினர் அவரது தஃவா ரீதியான சேவைகளைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கியது.

இந்நிகழ்வு PDS
இன் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் ஸலபி அவர்களின்
தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின்
வாழ்க்கையில் பறக்கத் செய்ய வேணடும் என PDS உறுப்பினர்கள் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட போட்டோக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
No comments:
Post a Comment